வெற்றியை உறுதி செய்வது உங்களுடைய பொறுப்பு.. நாளை ரிசல்ட் ; அண்ணாமலை அலர்ட்!

தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்: தேர்தல் வாக்குப் பதிவு முகவர்கள் பணி எத்தனை முக்கியமோ, அதை விட ஒரு படி மேலானது, வாக்கு எண்ணிக்கை முகவர் பணி என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தேர்தல் பணிகளின்போது மேற்கொண்ட கடின உழைப்பின் பலன்களை உறுதி செய்யும் பொறுப்பான பணி, வாக்கு எண்ணிக்கை முகவர் பணி. எனவே, இந்த சிறப்பான கடமையை மேற்கொள்ளவிருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வாக்குப் பதிவு எந்திரத்தில், வாக்குகளைப் பதிவு செய்யும் பொத்தான்கள் அடங்கிய Ballot பகுதி எப்படிச் செயல்படும். கன்ட்ரோல் யூனிட் (CU) என்று அழைக்கப்படும் வாக்கு எண்ணிக்கை பதிவாகியிருக்கும் பகுதி எப்படிச் செயல்படும், VVPAT என்ற, வாக்குகளை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு என, இவை அனைத்தையும் குறித்த அடிப்படையான விவரங்களை, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வாக்குப் பதிவு எந்திரத்தின் Ballot பகுதி, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குக் கொண்டு வரப்படுவதில்லை. கன்ட்ரோல் யூனிட் பகுதியும், VVPAT ஒப்புகைச் சீட்டு பகுதியும்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கொண்டு வரப்படும். ஒவ்வொரு கன்ட்ரோல் யூனிட் எந்திரத்திலும் பதிவாகியுள்ள, வாக்கு எண்ணிக்கை விவரங்கள் அறிய இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஆகலாம்.

மேலும் படிக்க: ரேஷன் கடைகளில் அது இருந்தா இது இல்ல.. என்ன நடக்குது? 2 மாதமும் சேர்த்து கொடுங்க.. அன்புமணி அட்வைஸ்!

ஒரு மணி நேரத்தில், இரண்டு அல்லது மூன்று சுற்றுகளின் முடிவுகள் வெளியாகலாம். இவை அனைத்தும் சரியான வகையில் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்யும் முக்கியப் பொறுப்பு, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கையில்தான் இருக்கிறது.

குறிப்பாக, தபால் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள், முழு கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பாக, நமது முகவர்கள், கன்ட்ரோல் யூனிட்டில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணும், வாக்குப் பதிவின்போது அந்த எந்திரத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்த எண்ணும் ஒன்றுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள முத்திரை, நமது கண்முன்னே தான் திறக்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு எந்திரத்திலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை, வாக்குப் பதிவு தினத்தன்று வழங்கப்பட்ட 17C படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையோடு ஒத்துப்போகிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

படிவம் 17C மற்றும் படிவம் 20 இரண்டிலும், வாக்குகள் எண்ணிக்கை ஒத்துப் போவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், படிவம் 20 குறிப்பிடப்படும் வாக்குகள் கூட்டப்படும்போது, எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக, படிவம் 20ல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்படும் வரை, வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகாமில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு எந்திரத்தின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும்போதும், முகவர்கள் அந்த எண்ணிக்கையைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மொத்த வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும், 5 வாக்குப் பதிவு மையங்களைத் தேர்ந்தெடுத்து, VVPAT எனப்படும் ஒப்புகைச் சீட்டுடன், பதிவான வாக்குகளைச் சரிபார்க்கும் பணி நடைபெறும். அதில் ஏதேனும் தவறாக இருந்தால், தலைமை முகவர் வழியாக, மைய தேர்தல் அதிகாரியிடம் முறையிடலாம். வாக்குப்பதிவு எந்திரத்தையும், விவிபேட் எந்திரத்தையும் சரிபார்த்து, எண்ணிக்கையில் குளறுபடி இருப்பது நிரூபிக்கப்பட்டால், குறிப்பிட்ட எந்திரத்தின் வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்படும் எனவே அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று, குறித்த நேரத்துக்கு முன்பாகவே நமது முகவர்கள், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் செல்வது முக்கியம். வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை, அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில்தான் திறக்கப்படும்.

குறிப்பெடுக்கத் தேவையான பென்சில், பேனா, வெள்ளைக் காகிதம் உள்ளிட்டவற்றை நாம் தயாராக வைத்திருப்பது சிறப்பு. நமது வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பு மிகுந்த வாக்கு எண்ணிக்கை முகவராகச் செயல்படவிருக்கும் உங்கள் அனைவரின் பணியும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 minutes ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

1 hour ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

2 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

4 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

5 hours ago

அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!

புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…

5 hours ago

This website uses cookies.