அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறையின் மதிப்பீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் 200 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்கும்படி அவர் மனு தாக்கல் செய்து வந்தாலும், அவரது நீதிமன்ற காவல் பல முறை நீட்டிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கரூரில் பல கோடி மதிப்பிலான புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். இந்த நிலையில், அசோக் வீட்டில் வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அசோக் கட்டி வரும் புதிய வீட்டின் மதிப்பு, பரப்பளவு, கட்டுமான செலவுகள் குறித்து மதிப்பிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அசோக் ஆஜராகாமல் இருந்து வருகிறார். தற்போது, அவரது சொகுசு பங்களா வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குள் வந்திருப்பதால், அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.