அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறையின் மதிப்பீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் 200 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்கும்படி அவர் மனு தாக்கல் செய்து வந்தாலும், அவரது நீதிமன்ற காவல் பல முறை நீட்டிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கரூரில் பல கோடி மதிப்பிலான புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். இந்த நிலையில், அசோக் வீட்டில் வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அசோக் கட்டி வரும் புதிய வீட்டின் மதிப்பு, பரப்பளவு, கட்டுமான செலவுகள் குறித்து மதிப்பிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அசோக் ஆஜராகாமல் இருந்து வருகிறார். தற்போது, அவரது சொகுசு பங்களா வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குள் வந்திருப்பதால், அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.