30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை ; சிக்குகிறதா முக்கிய புள்ளிகள்…? தமிழகத்தில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan20 September 2023, 8:26 am
தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தொழில் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத் துறைக்கு கான்வேயர் பெல்ட் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
வரி ஏய்ப்பு புகாரில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையானது, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, எண்ணூர், நாவலூர் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான வருமான வரிதுதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.