காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டு சேலை விற்பனை கடையில் வருமானவரிதுறையினர் திடீர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பட்டு சேலைக்கு மிகவும் புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரில் நூற்றுக்கணக்கான பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வரிஏய்ப்பு செய்து வருகின்ற நிலையில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டு சேலை உற்பத்தி நிறுவனமான ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சென்னையிலிருந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஏழு அதிகாரிகள், மூன்று காவலர்கள் உட்பட சுமார் பத்து பேர் இரண்டு கார்களில் வந்து ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் சோதனை செய்து வருகின்றார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இயங்கி வருகின்ற சாய் சில்க் கலாமந்திர் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான ஸ்ரீ வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் கோபிநாத் மக்கள் நீதி மய்த்தின் மாநில பொது செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும் வருமான வரித்துறை ரெய்டால் காந்தி சாலையில் உள்ள மற்ற பட்டு சேலை உற்பத்தி நிறுவனங்களில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.