இந்தி ஒழிக என்பது அல்ல.. தமிழ் வாழ்க என்பதுதான்.. மொழிப் போர் தியாகிகள் தினத்தில் சீமான் பரபர பேச்சு!

இந்தி ஒழிக என்பது அல்ல. தமிழ் வாழ்க என்பதுதான்.. மொழிப் போர் தியாகிகள் தினத்தில் சீமான் பரபர பேச்சு!

இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் உயிர் நீத்த எண்ணற்ற தமிழர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

உடுமலைப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாள் வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நாம் தமிழர் ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம் கட்டுவோம். எப்படி வைக்கிறேன் பாரு.. ஆனால் நீ வைக்கும் சமாதி எந்த இடத்துக்கு போகும் என எவனுக்கும் தெரியாது. இது என் நிலம். இது என் நாடு. என் இன அடையாளம்தான் மேலோங்கி நிற்கும். எங்கு திரும்பினாலும் தமிழ், தமிழர் அடையாளம்தான் இருக்கும்.

இந்திக்கு எதிரான மொழிப் புரட்சி அல்ல.. இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப் புரட்சி இங்கு நடந்தது. நாம் உலகின் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல இந்தி உட்பட. நம்முடைய கோட்பாடு இந்தி ஒழிக என்பது அல்ல. தமிழ் வாழ்க என்பதுதான். நான் ஏன் அவர்களது அம்மா ஒழிய வேண்டும் என சொல்ல வேண்டும்? அவன் மொழி அழிய வேண்டும் என நான் ஏன்டா சொல்லனும்? என் மொழி வாழனும்.. என் மொழியை காக்கனும் அதான் என் கோட்பாடு. என் மொழியை சாகாமல் காக்க வேண்டும். அதுதான் கோட்பாடு.

இந்தியாவில் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் சமஸ்கிருதத்துக்கு என ஏதாவது ஒரு மாநிலம் பிரிக்கப்பட்டதா? கோவிலில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதுகிறவர்கள் கூட அவர்களுக்குள் சமஸ்கிருதத்தில் பேசிக் கொள்வதில்லை.

இந்திய அரசு தெரிவித்த புள்ளி விவரப்படியே 22,000 பேர்தான் சமஸ்கிருதம் பேசுகின்றனர். ஆனால் மடாலயங்கள், ஆசிரமங்களில் சமஸ்கிருதம் கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு சீமான் பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

15 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

15 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

16 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

17 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

18 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

20 hours ago

This website uses cookies.