சென்னை : ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவதூறு பரப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் பரஸ்பரமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, காணொளி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேசவிரோதி என்று கூறியதாக குற்றம்சாட்டினார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்ததுடன், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேச விரோதிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ கூறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதில் உண்மையில்லை என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணமாக இருந்த திமுக இன்று அதிமுகவை களங்கப்படுத்துவதா? எனக் கூறினார். மேலும், அவதூறுகளை பரப்புவது முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல என்றும், அவர் அட்வைஸ் செய்துள்ளார்.
ஏற்கனவே, திமுக – காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை அதிமுகதான் கொண்டு வந்ததாக மடை மாற்றி விடும் வேளையில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது தேர்தலுக்காக ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.