வேலூர் : ஆளும் திமுகவின் பண பலத்தையும் மீறி ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்ள குடியாத்தம் வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , அவர் பேசியதாவது :- ஆளும் திமுக இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைத்து வருகிறது. அந்த பண பலத்தையும் மீறி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைவது என்பது எல்லோருடைய கருத்தாகவும், என்னுடைய கருத்தாகவும் இருக்கிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைய வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது நான் தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டு. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று சொல்ல முடியாது. திமுக ஆட்சியில் நன்மையும் செய்யவில்லை. தீமையும் செய்யவில்லை.
மேலும், சென்னையில் கடலின் நடுவே கலைஞரின் பேனா வடிவில் சிலை வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் நான் கூட பேரறிஞர் அண்ணாவின் புத்தகத்தை வைக்கலாம் என்று சொல்வேன் ஏற்றுக் கொள்வார்களா? காமராஜர் சிலையை வைப்பேன் என்று சொல்வேன் ஏற்றுக் கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பினார்
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என தெரிவித்தார்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.