வேலூர் : ஆளும் திமுகவின் பண பலத்தையும் மீறி ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்ள குடியாத்தம் வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , அவர் பேசியதாவது :- ஆளும் திமுக இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைத்து வருகிறது. அந்த பண பலத்தையும் மீறி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைவது என்பது எல்லோருடைய கருத்தாகவும், என்னுடைய கருத்தாகவும் இருக்கிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைய வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது நான் தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டு. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று சொல்ல முடியாது. திமுக ஆட்சியில் நன்மையும் செய்யவில்லை. தீமையும் செய்யவில்லை.
மேலும், சென்னையில் கடலின் நடுவே கலைஞரின் பேனா வடிவில் சிலை வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் நான் கூட பேரறிஞர் அண்ணாவின் புத்தகத்தை வைக்கலாம் என்று சொல்வேன் ஏற்றுக் கொள்வார்களா? காமராஜர் சிலையை வைப்பேன் என்று சொல்வேன் ஏற்றுக் கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பினார்
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என தெரிவித்தார்.
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
This website uses cookies.