விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் தனது கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம் – குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது
விவாகரத்து பெற்ற மனைவிக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.20,000 வழங்க குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து முகமது அப்துல் சமத் என்பவர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜீவனாம்சம் செலுத்துவதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது, ஆனால் தொகையை ரூ.10,000 ஆக மாற்றியது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்கள் முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 சட்டத்தை நாடலாம் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார், மேலும் இது பிரிவு 125 CrPC செய்வதை விட அதிகமாக வழங்குகிறது என்று வலியுறுத்தினார்.
இந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
“பிரிவு 125 அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்ற முக்கிய முடிவோடு குற்றவியல் மேல்முறையீட்டை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்” என்று நீதிபதி நாகரத்னா கூறினார். நீதிபதி நாகரத்னா மற்றும் நீதிபதி மாசி ஆகியோர் தனித்தனியாக, ஆனால் ஒரே நேரத்தில் தீர்ப்புகளை வழங்கினர்.
ஜீவனாம்சம் கோரும் சட்டம், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்று அந்த அமர்வு தெளிவுபடுத்தியது.
பிரிவு 125,போதிய அளவு வருமானம் உள்ள ஒரு நபர் தனது மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோருக்கு வழங்கும் பராமரிப்பை மறுக்க முடியாது என்று கூறுகிறது.
பராமரிப்பு என்பது திருமணமான பெண்களின் அடிப்படை உரிமை என்று நீதிமன்றம் கூறியது. “இந்த உரிமையானது மத எல்லைகளைக் கடந்து, அனைத்து திருமணமான பெண்களுக்கும் பாலின சமத்துவம் மற்றும் நிதிப் பாதுகாப்பின் கொள்கையை வலுப்படுத்துகிறது” என்று அது மேலும் கூறியது.
“சில கணவர்கள், மனைவி, உணர்வு ரீதியாகவும், பிற வழிகளிலும் தங்களைச் சார்ந்திருப்பதை உணரவில்லை.
குடும்பத்திற்காக இல்லத்தரசிகள் ஆற்றிய இன்றியமையாத பங்கு மற்றும் தியாகங்களை இந்திய ஆண்கள் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.”என்று தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா வரவேற்றுள்ளார். “NCW தலைவி, திருமதி. ரேகா ஷர்மா, CrPC இன் பிரிவு 125 இன் கீழ் முஸ்லீம் பெண்களின் பராமரிப்பு உரிமையை உறுதிப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறோம்.இந்த முடிவு பாலின சமத்துவம் மற்றும் அனைத்து பெண்களுக்கும் நீதிக்கான ஒரு முக்கிய தீர்ப்பாகும் “என X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, 1985 இல் ஷா பானோ வழக்கு முக்கியமானதாக ஆகிறது. இந்த முத்தலாக் வழக்கின் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் CrPC இன் பிரிவு 125 அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பொருந்தும் என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், முஸ்லிம் பெண்கள் விவாகரத்துக்குப் பிறகு 90 நாட்களுக்குப் பிறகு ஜீவனாம்சம் பெற முடியும் என்று கூறியது.
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
This website uses cookies.