நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு நேற்று அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் விக்ரமாண்டி வி -சாலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது .பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.
மாநாட்டில் பேசிய கட்சி தலைவரான விஜய் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டு பல விஷயங்களை குறித்து பகிர்ந்துக் கொண்டார். குறிப்பாக அரசியல் எதிரிகளாக நான் திமுகவை தான் பார்க்கிறேன் என நேரடியாக அவர் தாக்கி பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு அரசியல் கட்சி தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.மேலும் இந்த மாநாட்டில் பேசிய விஜய் பாஜக சித்தாந்த எதிரி எனவும் திமுக அரசியல் எதிரி என்றும் கூறி இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என்பதை வரவேற்பதாகவும் நீட், ஆளுநர் விவகாரங்களில் விஜய்யின்
கொள்கைகளை ஏற்கவில்லை எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இப்படியாக விஜய் யின் பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பும் விமர்சனமும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் மாநாட்டில் பேசிய கருத்துகளும் அவரது நடவடிக்கைகளும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் மாநாட்டில் பேசிக்கொண்டிருந்த போது விஜய் திடீரென கேப் விட்டிருந்தார். சில நிமிடங்கள் பேசாமல் இருந்த அந்த சமயத்தில் விஜய்யின் தொண்டர்களுக்கு மத்தியில் கடவுளே அஜித்தே…. கடவுளே அஜித்தே என்ற ஒரு கரகோஷத்துடன் குரல்கள் எழுப்பினர்.
அப்போது விஜய் அதை கேட்டு கடும் கோபமாக டென்ஷனான ரியாக்ஷன் உடன் அமைதி காத்து மீண்டும் பேச தொடங்கினார். இந்த விஷயம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.