கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கன் என்பவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர் தனது மகன்களுடன் சேர்ந்து சொந்த ஊரிலேயே ஊரக்கடை நடத்தி வருகிறார். மகள்களில் ஒருவரான திரவியம் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால், தனது மகள்கள் ரியாஷினி (5), விஜயகுமாரி (3) ஆகியோரை அழைத்து வந்து தந்தை பொன்னுரங்கனுடன் நத்தாமூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திரவியம் தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னுரங்கன், அவர்களை காப்பாற்றும் நோக்கில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவரும் அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனால், தீவிபத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
This website uses cookies.