கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கன் என்பவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர் தனது மகன்களுடன் சேர்ந்து சொந்த ஊரிலேயே ஊரக்கடை நடத்தி வருகிறார். மகள்களில் ஒருவரான திரவியம் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால், தனது மகள்கள் ரியாஷினி (5), விஜயகுமாரி (3) ஆகியோரை அழைத்து வந்து தந்தை பொன்னுரங்கனுடன் நத்தாமூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திரவியம் தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னுரங்கன், அவர்களை காப்பாற்றும் நோக்கில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவரும் அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனால், தீவிபத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.