கள்ளக்குறிச்சி கலவரத்தில் பொய் வழக்குகளை போட்டு தங்கள் மகன்களை கைது காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி பிளஸ் டூ மாணவி மர்ம மரணம் சம்பவத்தை தொடர்ந்து, கணியாமூர் பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கலவரத்திற்கு சம்பந்தமே இல்லாத குரூப் 4 தேர்வு எழுதிய மாணவர்களையும், காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரத்துடன் அவர்கள் பெற்றோர்கள் டிஜிபி அலுவலகத்தில் தங்களின் மகன்களை விடுவிக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பேசியதாவது :- தங்களின் மகன்களின் எதிர்காலம் காவல்துறையின் கைது நடவடிக்கையால் கேள்விக்குறியாகி உள்ளது. தூய்மை பணியாளராக உள்ளேன். தூய்மை பணியாளரின் மகன் குரூப் 4 தேர்வு கூட எழுத கூடாதா?
தன் மகனும் பட்டம் பெற்று அரசு உத்தியோகத்தில் இருக்க வேண்டும் என்பது எங்களின் கனவு. அந்த கனவு தற்போது வீணாகி விட்டது, என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மேலும், என் மகன் எங்கு சென்றான். அந்த நேரத்தில் எங்கிருந்தான் என்பது குறித்து தான் டிவி காட்சிகள் ஆதாரத்துடன் வைத்திருக்கிறோம். அப்படி என் மகன் தவறு செய்திருந்தால் நான் சட்டத்துக்கு தலை வணங்குகிறேன், என குடியரசு வசந்த் அவர்களின் தந்தை செல்வராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து, பேசிய அவர், தேர்வு எழுதிவிட்டு வந்ததாக காண்பித்த ஹால் டிக்கெட்டையும் காவல் துறையினர் கிழித்தெறிந்துள்ளனர், என்றார்.
பின்னர் பேசிய வழக்கறிஞர், காவல் துறையினர் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு அப்பாவிகளை கைது செய்துள்ளதாகவும், சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட இணைத்தை சேர்ந்தவர்களை மட்டுமே காவல்துறையினர் கைது செய்ததாகவும், விரைவில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
This website uses cookies.