காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குருவிமலை வலத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான தனியார் வெடி பொருள் தயாரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் 25க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என பலர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆலையில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்ததால் அனைவரும் வெடிவிபத்தில் சிக்கினர். இதில், 30க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், போலீசாரும், தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, டி ஐ ஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.