திருப்பூர் : பேனா, பேப்பர் வாங்க ரூ.50 லட்சமும், தலைவரின் பயன்பாட்டிற்கு ரூ.15 லட்சத்தில் ஸ்கார்பியோ கார் வாங்கவும் காங்கேயம் நகராட்சி கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் – காங்கேயம் நகராட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில், நகராட்சி தலைவர் பதவி, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்தது போன்று, திமுகவினரே இந்தத் தலைவர் பதவியை ஆக்கிரமித்துக் கொண்டனர். அதாவது, திமுக சார்பில் 1-வது வார்டில் போட்டியிட்ட சூரிய பிரகாஷ் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், கூட்டணி கட்சிகள் அதிருப்தியடைந்தனர்.
மேலும், கூட்டணி கட்சிகள் அளித்த அழுத்தத்தின் காரணமாக,கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல், சூரிய பிரகாஷ் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து திமுக தலைமை அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது.
இதை தொடர்ந்து, 16 உறுப்பினர் கொண்ட காங்கேயம் நகராட்சி கூட்டம் ஆணையர் வெங்கடேஸ்வரன் தலைமையில் இன்று நடந்தது. 20 நிமிடங்களே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ரூ.98.97 கோடியே நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
குறிப்பாக, நகராட்சித் தலைவர் சூரியபிரகாஷ் பயன்படுத்துவதற்காக ரூ.15 லட்சத்தில் ஸ்கார்பியோ கார் வாங்கவும், பேப்பர், பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் வாங்க ரூ 50 லட்சத்துக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்களிடையே வாயடைக்கச் செய்யும் அளவிற்கு இருந்தது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.