கனிமொழியின் கணவருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் தொழில் நிமித்தமாக சிங்கப்பூரிலேயே தங்கியிருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியபட்டுள்ளது. இதையடுத்து அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

.இதனிடையே இந்த தகவல் அறிந்து உடனடியாக விமானம் பிடித்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார் கனிமொழி. அங்கு மருத்துவமனையில் தங்கி தனது கணவர் அரவிந்தன் உடல்நிலையை கவனித்துக்கொள்கிறார்.

மருத்துவர்கள் அளித்து வரும் தொடர் சிகிச்சையின் காரணமாக கனிமொழியின் கணவர் உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் பூரண நலம் பெற்று அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் தனது தாயார் ராஜாத்தி அம்மாளுக்கு உடல்நலக் குறைவு, மற்றொரு பக்கம் கணவர் அரவிந்தனுக்கு உடல் நலக் குறைவு என்பதால் கனிமொழி சற்று கலங்கி போய்விட்டதாக தெரிவிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

இதனிடையே தனது தங்கை கனிமொழியை தினமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் அரவிந்தனின் ஹெல்த் அப்டேட்ஸ் பற்றி கேட்பதோடு தைரியமும் அளித்து வருகிறாராம்.

இதனால் கனிமொழி ஓரளவு தைரியமாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதனிடையே இந்த தகவல் அறிந்த கட்சியினரும், முக்கிய நிர்வாகிகளும், ஆதரவாளர்களும், கனிமொழியை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவரது கணவர் உடல்நலம் பற்றி விசாரிப்பதோடு ஊக்கமும் அளித்து வருகிறார்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

7 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

18 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

1 hour ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

1 hour ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

This website uses cookies.