கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக பாஜகவும் திமுகவும் போஸ்டரில் மோதிக் கொள்வது வாடிக்கையாகிவிட்ட நிலையில், இன்று பா.ஜ.க வினர் ஒட்டிய போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஜக சார்பில் பிரம்மாண்ட போஸ்டர் ஒன்று மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பொங்கல் பரிசு தொகை ரூ 5000 எங்கே என திமுகவிற்கு பாஜகவினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த போஸ்டரால் மாவட்ட முழுதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து, பாஜகவினருக்கு கவுண்டர் கொடுக்கும் வகையில் திமுக சார்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், ரூ.15 லட்சம் எங்கே என ஒட்டப்பட்டிருந்தது. இந்த இரண்டு போஸ்டர்களால் மாவட்டம் முழுவதும் பாஜக – திமுகவினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் திடீரென பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது .அதில் அறிவாலயே அரசே பதில் சொல்! கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என்ன ஆச்சு?, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என்ன ஆச்சு?, மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி என்ன ஆச்சு.? இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 என்ன ஆச்சு ? என்ற வாசகங்கள் பொருந்திய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதனால் மாவட்டத்தில் மீண்டும் பாஜக – திமுக வினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வெகுவிரைவில் வரும் நிலையில் திமுக – பாஜக இதுபோன்று மோதிக்கொள்வது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.