மதுபான விநியோகம்; நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி; 6 வருடங்களுக்கு தடை;பாஜக எடுத்த முக்கிய முடிவு,..

கர்நாடகாவில் பாஜக எம் பி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்க ஏற்பாடு செய்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி பாஜகவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். மதுபான விருந்து நிகழ்ச்சியை நடத்த கலால் துறை அனுமதி வழங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த சுதாகர் என்பவர் வெற்றி பெற்றார். இதனை கொண்டாடும் வகையில் நெலமங்களாவில் பொதுமக்களுக்கு பாஜகவினர் மதுபான பாட்டில்களை வழங்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

நெலமங்களாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி என்பவர், பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது.இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு கலால்துறையே அனுமதி அளித்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


இந்தநிலையில், பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்க ஏற்பாடு செய்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி பாஜகவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு ரூரல் எஸ்.பி.,யான சி.கே.பாபா கூறுகையில், “கலால் துறை அனுமதி அளித்து, ஏற்பாடுகளை கவனிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதில், போலீஸ் துறையின் தவறு இல்லை, அனுமதி வழங்குவது கலால் துறையின் பொறுப்பு.

பாஜக நடத்திய மதுபான விருந்து தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் , இது பாஜகவின் கலாச்சாரம் . நெலமங்களாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்களுக்கு மதுபானம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்வது வேறு விஷயம், அதற்கு முன்பு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

ஒரு பொது நிகழ்ச்சியில் அதன் கட்சியினருக்கு மதுபானம் விநியோகிக்க அதன் எம்.பி.க்கு பாஜக அனுமதி வழங்கியுள்ளது.பாஜக பொதுக்கூட்டங்களில் மது விநியோகம் செய்வதன் மூலம் கலாச்சாரத்தை பாஜக எவ்வாறு உயர்த்திப்பிடிக்கிறது என்பதை பாஜகவின் தேசியத் தலைவர்கள் மக்களுக்குச் சொல்வது முக்கியம் ,” என்றார்.

Sudha

Share
Published by
Sudha

Recent Posts

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

17 minutes ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

26 minutes ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

1 hour ago

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

1 hour ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

1 hour ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

2 hours ago