கர்நாடகாவில் பாஜக எம் பி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்க ஏற்பாடு செய்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி பாஜகவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். மதுபான விருந்து நிகழ்ச்சியை நடத்த கலால் துறை அனுமதி வழங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த சுதாகர் என்பவர் வெற்றி பெற்றார். இதனை கொண்டாடும் வகையில் நெலமங்களாவில் பொதுமக்களுக்கு பாஜகவினர் மதுபான பாட்டில்களை வழங்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
நெலமங்களாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி என்பவர், பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது.இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு கலால்துறையே அனுமதி அளித்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்க ஏற்பாடு செய்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி பாஜகவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு ரூரல் எஸ்.பி.,யான சி.கே.பாபா கூறுகையில், “கலால் துறை அனுமதி அளித்து, ஏற்பாடுகளை கவனிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதில், போலீஸ் துறையின் தவறு இல்லை, அனுமதி வழங்குவது கலால் துறையின் பொறுப்பு.
பாஜக நடத்திய மதுபான விருந்து தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் , இது பாஜகவின் கலாச்சாரம் . நெலமங்களாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்களுக்கு மதுபானம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்வது வேறு விஷயம், அதற்கு முன்பு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
ஒரு பொது நிகழ்ச்சியில் அதன் கட்சியினருக்கு மதுபானம் விநியோகிக்க அதன் எம்.பி.க்கு பாஜக அனுமதி வழங்கியுள்ளது.பாஜக பொதுக்கூட்டங்களில் மது விநியோகம் செய்வதன் மூலம் கலாச்சாரத்தை பாஜக எவ்வாறு உயர்த்திப்பிடிக்கிறது என்பதை பாஜகவின் தேசியத் தலைவர்கள் மக்களுக்குச் சொல்வது முக்கியம் ,” என்றார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.