கரு பழனியப்பனின் பூர்வீகம் காரைக்குடி; அப்பா சின்ன கருப்பைய்யா, அம்மா நாகம்மை.புத்தகம் என்றால் கரு பழனியப்பனுக்கு சிறு வயதில் இருந்தே கொள்ளை பிரியம். கண்ணதாசன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் உள்ளிட்ட பிரபல கதை ஆசிரியர்கள் அப்போதே அவருக்கு அறிமுகமாகி விட்டனர்.
மதுரை செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பயின்றார். தொடர்ந்து மதுரை தியாகராஜா கல்லூரியில் முதுகலை பட்டத்தையும் முடித்தார்.புத்தக வாசிப்பும், தொடர்ந்து படங்களை பார்த்தலும் கரு பழனியப்பனை சினிமாவின் பக்கம் அழைத்து வந்தது.
1994 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் நுழைந்த கரு பழனியப்பன் இயக்குநர் பார்த்திபனுடன் ‘அவர் புள்ள குட்டிகாரன்’, ‘ஹவுஸ் ஃபுல்’ ஆகிய படங்களில் பணியாற்றினார். தொடர்ந்து இயக்குநர் எழிலிடம் சேர்ந்த பழனியப்பன் ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.
.2003 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த ‘பார்த்திபன் கனவு’ படத்தை இயக்கி திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். விமர்சகர்களிடம் இருந்து பாராட்டை பெற்ற இந்தப்படத்திற்காக மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதும் அவருக்கு கிடைத்தது.
தொடர்ந்து சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம், மந்திரப்புன்னகை படத்தை இயக்கினார். இதில் மந்திரப் புன்னகை படத்தில் இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்தார்.
இவரது மேடை பேச்சுகளும், பேட்டிகளும் மக்களிடம் பிரபலமான நிலையில், பிற நடிகர்களின் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
ஜீ தமிழின் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
இந்த நிலையில் 4 வருடமாக அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த கரு பழனியப்பன், சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! நன்றி என பதவிட்டுள்ளார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.