கருணாநிதிக்கு வரலாறு எதுவும் இல்லை.. நாணயம் வெளியிட்டு பெயர் தேடிக்கிட்டாங்க : பாஜக பிரமுகர் பேச்சு!

கருணாநிதிக்கு வரலாறு எதுவும் இல்லாததால், மத்திய அமைச்சரை வரவழைத்து நாணயம் வெளியிட்டு பெயர் தேடிக் கொண்டனர்

தலைவாசலில் நடந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில், மாநில செயலாளர் பேசினார். சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தலைவாசல் அருகே, சிறுவாச்சூரில் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம், மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடந்தது.

இதில், மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசியதாவது: லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு 12 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. தலைவாசல் ரயில்வே ஸ்டேஷனில் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்துவதற்கு, மத்திய அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். கருணாநிதிக்கு வரலாறு எதுவும் இல்லை; அவரது குடும்பத்தினருக்கு நல்லது செய்தார். தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டால் பெயர் கிடைக்கும் என்று, தி.மு.க., அழைத்துள்ளது.

கழுத்தில் நகை இருந்ததை பார்த்து கண் உறுத்தியதால், நகையை அடமானம் வைக்கும்படி அமைச்சர் உதயநிதி கூறியதால், நகை அடமானம் வைத்து, மக்கள் ஏமாற்றமடைந்தனர். பா.ஜ., ஓட்டுக்கு பணம் இல்லை; நலத்திட்டம் மட்டுமே கொடுப்போம். ரேஷன் கடையில் பொருள் வழங்குவது மத்திய அரசு தான். ஆனால், கருணாநிதி, ஸ்டாலின் படம் வைத்துக் கொள்கின்றனர். மத்திய அரசு பணம் வழங்கவில்லை என்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். மத்திய அரசு தான் நிதி வழங்கும்போது, தி.மு.க.,வுக்கு எதற்கு ஓட்டு போட வேண்டும்.

ஊரக வேலை திட்டத்தில், தொழிலாளருக்கு, தற்போது தலா, 250 ரூபாய் என, மொத்தம் 4,200 ரூபாய் வழங்கப்படுகிறது. விரைவில், 320 ரூபாய் வழங்கப்படும். 1,000 ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகைக்கு, ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகின்றனர். மத்திய அரசு, அதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டுவதில்லை.

தி.மு.க., என்ற திருட்டு பூசாரியை ஆட்சியில் அமரவைத்துள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்பிவிட்டு பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் தான், தமிழகம் வளர்ச்சி பெறும். தமிழகத்தில், 24 மணி நேரமும் மதுவிற்பனை நடந்து வருகிறது.

தி.மு.க., ஆட்சியில் ஊருக்கு ஊர் ‘டாஸ்மாக்’ திறந்தது தான் சாதனையாக உள்ளது. கள்ளக்குறிச்சியில், விஷ சாராயம் குடித்து இறந்த 65 பேரில், ஆறு பெண்கள் இறந்துள்ளனர். பார்வை இழந்தவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் போகியுள்ளது. தமிழக மக்களை குடிக்க வைத்து, ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது. ‘டாஸ்மாக்’ கடையிலும் தான் சாராயம் தான்; கள்ளச்சராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். ராணுவத்தில் சென்று இறந்தால் காசு இல்லை.

‘டாஸ்மாக்’ மது அருந்தும் நபர்களுக்கு, தற்போது மன நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆண்டுக்கு, 55 ஆயிரம் கோடி வருவாய்க்காக, ‘டாஸ்மாக்’கில் மது விற்று, அடுத்த தலைமுறையை திராவிட மாடல் அழித்து வருகிறது. தி.மு.க.,வுக்கு போடும் ஓட்டு, அடுத்த தலைமுறைக்கு வைக்கும் சூனியமாகும்.

தி.மு.க.,வினர், பா.ஜ.,வினர் கண்டு பயத்தில் உள்ளனர். பா.ஜ., இல்லை எனில் தமிழக மக்களை தின்றுவிட்டு போவார்கள். மூன்று ஆண்டில், பா.ஜ., மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டுள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்தால், நகை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் என, லோக்சபா தேர்தலில், தி.மு.க., பொய் பிரசாரம் செய்தனர். தற்போது, நகை விலை 6,000 ரூபாய் குறைந்துள்ளது.

‘முத்ரா’ திட்டத்தில், தமிழகத்தில் 2 கோடி பேர் கடன் வாங்கியுள்ளனர். பா.ஜ.,வில் மட்டும் தான், அனைத்து பொறுப்புகளுக்கும் வரமுடியும். தி.மு.க.,வில் துணை முதல்வர் யார் என்று, அவர்களே பேச வைக்கின்றனர். முதல்வரோ, பழம் பழுக்கவில்லை என்கிறார். விலைவாசி உயர்வில் மக்கள் அவதிப்படும் நிலையில், மகனை துணை முதல்வராக்க வேண்டும் என்று பேசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

14 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

15 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

16 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

16 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

16 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

17 hours ago

This website uses cookies.