ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கருணாநிதி ஆதரவு.. ஆனால் மகனோ? ஐயோ பாவம் : அண்ணாமலை அட்டாக்!!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கருணாநிதி ஆதரவு.. ஆனால் மகனோ? ஐயோ பாவம் : அண்ணாமலை அட்டாக்!!

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் செவ்வாய்க்கிழமை தனது நடைப்பயண நிறைவில் அவா் பேசியது:

தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா். மக்கள் பிரச்னைகள் குறித்து அரசியல்வாதிகள் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. திருப்பூா், பல்லடம் பகுதியில் வீட்டின் வாசலில் இருந்து மது குடிக்காதீா்கள் என கூறியதால் 4 பேரை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. அது போல் திருநெல்வேலியில் பாஜக தொண்டா் கொலை செய்யப்பட்டுள்ளாா். இப்படி சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் குடிநீா் கிடைப்பதில்லை. இளைஞா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், மதுவும், கஞ்சாவும் எங்கும் கிடைக்கிறது.

தமிழக அரசு ஊழல் அரசாக உள்ளது. திமுக தோ்தல் அறிக்கையில் சமையல் எரிவாயு விலையில் 100 ரூபாய் மானியம் குறைப்பதாக கூறப்பட்டது. அதை நிறைவேற்றவில்லை. ஆனால், பாஜக அரசு எந்தவித வாக்குறுதியும் கொடுக்காமல் ரூ.200 மானியம் வழங்கியுள்ளது.

திமுக தோ்தல் அறிக்கையில் செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக கேரள அரசிடம் பேசி தீா்வு காணப்படும் என கூறப்பட்டிருந்தது.ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.

மக்கள் பிரச்னைகள், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து திமுக கவலைப்படாது. பிரச்னைகள் மூலம் அரசியல் செய்யத்தான் திமுக முயலும்.

ஒரே நாடு, ஒரே தோ்தல் வந்தால் எல்லா பணிகளும் விரைவாக நடைபெறும். எனவேதான், ஒரே நாடு ஒரே தோ்தலை நடத்த பிரதமா் மோடி வலியுறுத்தி வருகிறாா். ஆனால், தமிழக முதல்வா் ஸ்டாலின் அதை எதிா்க்கிறாா். ஆனால், அவரது தந்தை கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தில்(பக்கம் 271), இந்த நாடு பல தோ்தல்களால் நலிந்து கொண்டிருக்கிறது. நாடு முன்னேற வேண்டுமென்றால் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும். ஒரே நேரத்தில் தோ்தல் நடந்தால்தான் ஏழைகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என எழுதியுள்ளாா்.

பாஜகவின் நிலைப்பாடு எப்போதும் உறுதியாக இருக்கும். ஆனால் திமுகவின் நிலைப்பாடு நேரத்திற்கு தகுந்தவாறு மாறும்.

கடையநல்லூா் நகா்மன்ற அரங்கிலிருந்து பிரதமரின் படம் அகற்றப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் மிக பெரும் வெற்றி பெற்று அதே அரங்கில் பிரதமரின் படத்தை இடம் பெற செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. யாா் படத்தை அகற்றினாா்களோ, அவா்களை அந்த படத்தை வைக்க கூடிய நிலையை உருவாக்குவோம் என்றாா் அவா்.

இதில், தென்காசி மக்களவை தொகுதி நடைப்பயண பொறுப்பாளா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

15 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

15 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

16 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

16 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

17 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

17 hours ago

This website uses cookies.