கரூர் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், அதிகாரியை மாவட்ட ஆட்சியர் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலையை அடுத்துள்ள கழுகூர் அருகே உள்ள ஏ.உடையாபட்டி பகுதியில் வசித்து வருபவர் முத்துசாமி (41). மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு மாகாளிப்பட்டி கிராமத்தில் 2.80 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அதில் 18 செண்ட் நிலம் குறைவாக இருப்பதால், அவற்றை அளந்து தனிப்பட்டாவாக வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 20ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதி கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த நில அளவையர் சிவராதாவை சந்தித்து கேட்டுள்ளார்.
அப்போது நில அளவையருக்கும், முத்துச்சாமிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. இதனால் நில அளவையர் கொடுத்த புகாரின் பெயரில் முத்துச்சாமி மீது தோகைமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த முத்துச்சாமி, தன்னுடைய உடலில் மண்ணென்னையை ஊற்றிக் கொண்டு கூட்ட அரங்கிற்குள் சென்றுள்ளார்.
இதனை பார்த்த காவல்துறையினர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி எஸ்.கருப்பண்ண ராஜவேல் ஆகியோர் இணைந்து கூட்டுமுயற்சி எடுத்து சம்பந்தப்பட்டவரை வெளியே அழைத்து வந்து உடலில் தண்ணீரை ஊற்றி, உடையை மாற்றி ஆட்சியர் பிரபுசங்கரிடம் மனு அளிக்கச் செய்தனர்.
மனுவினை வாங்கிக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட அதிகாரியை, அந்த கூட்டத்தில் அழைத்த போது, சில நிமிடங்கள் தாமதமான நிலையில், எங்க போய் தொலையீறிங்க, என்று கடுமையான வார்த்தைகளை கையாண்டும், உடனே அந்த அதிகாரியிடம் மனுக்களை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், பல்வேறு மனுக்களை கொடுத்த என் மனு மீது இம்முறையும் எடுக்கவில்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார்.
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
This website uses cookies.