தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கண்டனங்களை தெரிவிப்பதாக எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 9 வார காலமாக ஊதியம் கொடுக்கப்படவில்லை. அன்றாட தேவைக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மத்திய அரசும், சம்மந்தப்பட்ட அமைச்சரும் இதில் தலையிட்டு அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்றார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய அரசு, மாநில அரசுகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது நமது உரிமை. கர்நாடகா காங்கிரஸ் செய்வது அநீதி தான். அணைகளில் இருக்கும் தண்ணீரை பகிர்ந்து கொள்ளவே உச்சநீதிமன்றம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசும், பாஜக மாநில தலைவரும் ஊடகங்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர், என்றார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.