கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் உள்ள கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சீல் வைத்து விட்டு செல்ல முயன்ற அதிகாரிகள் வாகனத்தை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் மாட்டு வண்டியை இழுத்து வந்து குறுக்கே கட்டியதால் அதிகாரிகள் வந்த 4 வாகனங்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு துணை மேயர் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு, நோட்டீசை ஆதரவாளர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
சீல் வைக்கப்பட்ட வீட்டிற்குள் துணை மேயர் தாரணி சரவணனின் மனைவி மற்றும் மகன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை, முற்றுகையிட்ட திமுகவினர், அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சூழலில், மீண்டும் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் இணையும் அனுபமா – சமந்தா பிரவின் கந்த்ரேகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பரதா" திரைப்படத்தில் பிரபல நடிகை சமந்தா கேமியோ…
சிப்பிக்குள் முத்து படத்தில் அல்லு அர்ஜுன் நடிகர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்த ஒருவர் தற்போது பான் இந்திய ஹீரோவாக கலக்கி…
மர்மர் படம் – சர்ச்சையின் மையம் இந்தியாவின் முதல் Found Footage ஹாரர் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட மர்மர் திரைப்படம்…
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தினர். சென்னையில்…
மருத்துவமனை அறிக்கை – சிறுவனின் உடல்நிலை புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திர அறிமுகமனார். இவரின் தாயார் மேனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம்…
This website uses cookies.