கரூர் : கரூரில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, சின்னம் பொருத்தும் பணியில் திமுகவினர் குளறுபடி செய்வதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
மாநகராட்சி தேர்தல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகின்றது. இதில், 12 வது வார்டு அதிமுக, பாஜக, திமுக தோழமைக் கட்சியான காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 8 நபர்கள் வேட்பாளராக களமிறங்கி வருகின்றனர்.
இதில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக கரூர் மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாக கூறி, எதிர்கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வார்டு ஏற்கனவே, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், சுயேட்சையாக தென்னை மரத்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு திமுகவினர் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த சுயேட்சை வேட்பாளரின் சின்னத்தை 6வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு மாற்றியதால், அதற்கு தேர்தல் அதிகாரிகள் துணை போவதாக கூறி அதிகாரிகளை கண்டித்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி மற்றும் மாற்று வேட்பாளருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே 6ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு சின்னத்தை மாற்றுவது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், வேண்டுமென்றே அதிமுக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை விடுத்து மற்ற இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். காங்கிரஸ் கட்சிக்கு என்று திமுக ஒதுக்கிய வார்டில், சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து திமுகவினர் இந்த செயலில் ஈடுபடுவதாகக் கூறி கரூர் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுகவினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் முறையிட்டனர்.
மேலும், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அதிமுக சார்பில் 12-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.