தேசிய பதவி கனவில் CM ஸ்டாலின்.. கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு எல்லையை தாரைவார்க்கும் திமுக ; அண்ணாமலை கடும் கண்டனம்

தேசிய பதவியின் கனவில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், கேரள கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலை, கூட்டணி என்ற பெயரில் கண்டிக்காமல், மவுனம் காத்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேரளா அரசு டிஜிட்டல் நில அளவீட்டு திட்டம் “எண்டே பூமி” என்ற பெயரில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் நில அளவீடு செய்து, தங்களுடைய கேரளா மாநில எல்லைகளை தமிழக எல்லைக்குள் விஸ்தரித்து வருவதை, தமிழக அரசு அதிகாரிகளும், முதலமைச்சர் ஸ்டாலினும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

வருவாய் பதிவு மற்றும் கணக்கெடுப்பு துறைகளின் தகவல்கள் மூலம், ஒரு புதிய டிஜிட்டல் தரவு தளத்தை கேரளா அரசு உருவாக்கி வருகிறது. கேரள அரசின் அறிவிப்பின்படி, புதிய கணக்கெடுப்பு வரைபடம் முடிவடைந்தவுடன், ஒவ்வொரு நபரின் நிலத்தின் அதிகாரப்பூர்வ பதிவு, கேரள எல்லைக்குள் சென்று விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

856.42 கோடி ரூபாய் செலவிலே, 1500 சர்வேயர்கள், மற்றும் 3200 உதவியாளர்கள் உட்பட 4700 ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த கணக்கெடுப்பு திட்ட பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். வயநாடு, காசர்கோடு, ஊட்டி, நாகர்கோயில், தென்காசி, பொள்ளாச்சி, கொடைக்கானல், குமிளி உள்ளிட்ட 13 முக்கிய எல்லை நிர்ணய மண்டலங்களில் தீவிரமாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தத் திட்டம் 1-11-2022 அன்று தேனி மாவட்ட எல்லையில் தொடங்கப்பட்ட நிலையில், 7-11-2022 அன்று தான், ஆழப்புழா மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட கடிதம் மூலம், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு, இந்தத் தகவல் உறுதியாகத் தெரிய வருகிறது.

இந்தச் செய்தியை மறுத்து, 10-11-2022 அன்று, தமிழ்நாடு வருவாய்துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட செய்தி குறிப்பில், “கேரள எல்லையில் டிஜிட்டல் முறையில் நில அளவை எதுவும் செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார். ஆனால் எல்லைப் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் நில அளவை நடப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் கேரள அரசு தங்கள் எல்லைப் பலகைகளை மாற்றி அமைப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

17-11-2022 அன்று நாகர்கோவில் மாவட்டம் ஆனைக்கல் பகுதியிலும், மற்றும் தேனி மாவட்டம் பாப்பம்பாறை பகுதியிலும், கேரளா அரசு, தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல், சுமார் 80 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என்று கையகப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கேரள அரசின் இந்த அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தியாகும்.

இடுக்கி, தேனி எல்லையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க, மங்களதேவி கண்ணகி திருக்கோவிலின் நிர்வாகத்தின் தமிழக உரிமைகளில், கேரள அரசு ஏற்கனவே தலையிடுகிறது. மேலும், திருவிழா நாட்களை மூன்று நாட்களில் இருந்து ஒரு நாளாக குறைத்து உள்ளது. திருக்கோவில் திறக்கும் தரிசன நேரத்தை 10 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக, கேரள அரசு குறைத்து உள்ளது. தமிழக எல்லைக்குள் அமைந்திருக்கும் கோவிலில், கேரள அரசின் தலையீட்டை தமிழக அரசு இதுவரை தடுக்கவில்லை. தமிழ் மகள் கண்ணகி திருக்கோயிலை பாதுகாக்க தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காலத்தினால் கைவிடப்பட்ட கம்யூனிஸ்ட்களின் தயவைக் கொண்டு, தன்னுடைய தேசிய பதவிகளுக்கான கனவுகளுக்காக, தமிழக முதல்வர் கண்மூடிக் கொண்டு கேரள அரசின் அத்துமீறல்களை அனுமதிக்கிறார். பினராயி விஜயனின் நட்பை புதுப்பித்துக் கொண்டு, மலையாளத்திலே பேசி, தமிழக நிலங்களை, மக்கள் நலங்களை காவு கொடுத்து, பதவி ஆசைக்காக மௌனம் காக்கிறார். திறமை இல்லாத திமுக ஆட்சியின், அவலத்தின் உச்சமாக, கேரள அரசு நில அபகரிப்பு செய்வதை கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக, தமிழக நலன்களை பலி கொடுத்த வரலாறு திமுகவிற்கு உண்டு. ஆனால் இனியும் அதைத் தொடர தமிழக பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்காது.

விரைவில் எல்லைப் பகுதிகளில், தமிழகத்தின் நலன்களையும், தமிழக விவசாயிகளின் நலன்களையும் பாதுகாப்பதற்காக, நானே நேரிலே சென்று ஆய்வு செய்வேன். தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணை கூட கேரள அரசு கொண்டு செல்ல தமிழக பாரதிய ஜனதா கட்சி அனுமதிக்காது. காலத்தினால் கைவிடப்பட்ட கம்யூனிஸ்ட்களும், திறமை இல்லாத திமுக அரசும், ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக் கொண்டு, கூட்டணி என்ற பெயரில் மௌனம் சாதித்து, தமிழகத்தின் இறையாண்மையை, நில வளத்தை பலி கொடுப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆகவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, இது பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல், மக்கள் சக்தியுடன் இணைந்து தமிழக எல்லையை மீட்பதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்த தயாராக இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே

விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…

21 minutes ago

75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…

1 hour ago

சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…

2 hours ago

சிறுவன் அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழக அரசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…

2 hours ago

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

18 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

18 hours ago

This website uses cookies.