திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மேல்மலை கிராமப் பகுதியில் போதை காளான், கஞ்சா சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கூக்கால் மலை கிராமப் பகுதியில் போலி ஆசிரமம் ஒன்று நடத்தப்படுவதாகவும், அந்த ஆசிரமத்திற்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து அவர்களுக்கு போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து கூக்கால் மலை கிராம பகுதியில் அமைந்துள்ள அழகன் ஆசிரமம் என்ற போலி ஆசிரமத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது ஆசிரமத்திற்கு உள்ளே போதை காளான் மற்றும் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்ய இந்த ஆசிரமத்திற்கு வந்துள்ள தகவல் தெரிந்ததை அடுத்து ஆசிரமத்தில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
காவல் துறையினர் விசாரணையில் உசிலம்பட்டி வடகாடு பட்டியைச் சேர்ந்த தன்ராஜ் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மலைப்பகுதியில் நிலம் வாங்கி அங்கு அழகன் ஆசிரமம் என்ற போலி ஆசிரமத்தை நடத்தி வந்ததும், தன்ராஜ் பி.இ பட்டதாரி என்றும் விசாரணையில் தெரியவந்தது. இவரும் போலிச் சாமியார் வேடம் அணிந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா , போதைக் காளான் விற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொடைக்கானல் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது பெயரளவிற்கு சோதனை இடாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.