ஜரூராக நடந்த கஞ்சா விற்பனை; போலி சாமியார் நடத்திய ஆசிரமத்தில் காளான் கஞ்சா; இளைஞர்களை குறிவைக்கும் கும்பல்,..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மேல்மலை கிராமப் பகுதியில் போதை காளான், கஞ்சா சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கூக்கால் மலை கிராமப் பகுதியில் போலி ஆசிரமம் ஒன்று நடத்தப்படுவதாகவும், அந்த ஆசிரமத்திற்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து அவர்களுக்கு போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து கூக்கால் மலை கிராம பகுதியில் அமைந்துள்ள அழகன் ஆசிரமம் என்ற போலி ஆசிரமத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது ஆசிரமத்திற்கு உள்ளே போதை காளான் மற்றும் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்ய இந்த ஆசிரமத்திற்கு வந்துள்ள தகவல் தெரிந்ததை அடுத்து ஆசிரமத்தில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

காவல் துறையினர் விசாரணையில் உசிலம்பட்டி வடகாடு பட்டியைச் சேர்ந்த தன்ராஜ் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மலைப்பகுதியில் நிலம் வாங்கி அங்கு அழகன் ஆசிரமம் என்ற போலி ஆசிரமத்தை நடத்தி வந்ததும், தன்ராஜ் பி.இ பட்டதாரி என்றும் விசாரணையில் தெரியவந்தது. இவரும் போலிச் சாமியார் வேடம் அணிந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா , போதைக் காளான் விற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கொடைக்கானல் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது பெயரளவிற்கு சோதனை இடாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Sudha

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

3 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

3 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

5 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

5 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

5 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

6 hours ago

This website uses cookies.