திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மேல்மலை கிராமப் பகுதியில் போதை காளான், கஞ்சா சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கூக்கால் மலை கிராமப் பகுதியில் போலி ஆசிரமம் ஒன்று நடத்தப்படுவதாகவும், அந்த ஆசிரமத்திற்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து அவர்களுக்கு போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து கூக்கால் மலை கிராம பகுதியில் அமைந்துள்ள அழகன் ஆசிரமம் என்ற போலி ஆசிரமத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது ஆசிரமத்திற்கு உள்ளே போதை காளான் மற்றும் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்ய இந்த ஆசிரமத்திற்கு வந்துள்ள தகவல் தெரிந்ததை அடுத்து ஆசிரமத்தில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
காவல் துறையினர் விசாரணையில் உசிலம்பட்டி வடகாடு பட்டியைச் சேர்ந்த தன்ராஜ் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மலைப்பகுதியில் நிலம் வாங்கி அங்கு அழகன் ஆசிரமம் என்ற போலி ஆசிரமத்தை நடத்தி வந்ததும், தன்ராஜ் பி.இ பட்டதாரி என்றும் விசாரணையில் தெரியவந்தது. இவரும் போலிச் சாமியார் வேடம் அணிந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா , போதைக் காளான் விற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொடைக்கானல் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது பெயரளவிற்கு சோதனை இடாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.