சுற்றுலா செல்பவர்கள், மிகுந்த கவனத்துடன், வாகனங்களில் நிதானமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், இளம் சிறுமி உயிரிழந்ததும், பலர் காயமுற்றதும் அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். சிறுமியின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைந்து நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
மேலும் படிக்க: கோத்தகிரியில் பயங்கரம்… சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து ; 8 வயது சிறுமி உயிரிழப்பு…!
சமீபத்தில் ஏற்காட்டில் நடந்த விபத்தின் வேதனைச் சுவடுகள் மறைவதற்குள், மீண்டும் அது போன்ற விபத்து நடந்திருப்பது, பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா செல்பவர்கள், மிகுந்த கவனத்துடன், வாகனங்களில் நிதானமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன், தங்கள் பயணங்களை பாதுகாப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.