மயிலாடுதுறை ; சீர்காழி அருகே இடத்தகராறில் வேலிக்கு தீவைத்து, குடியிருப்புவாசியை திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த அன்புமணி. இவரது கணவரும், முன்னாள் திமுக ஊராட்சிமன்ற தலைவருமான மணிமாறனும், அவரது மகன்களும், பிரகலாதன் என்பவரின் இடத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மணிமாறனும், அவரது மகன்களும் சேர்ந்து பிரகலாதனின் இடத்தை சுற்றியுள்ள வேலியை தீவைத்து கொளுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, பிரகலாதனை கட்டையால் ஓடஓட விரட்டி அடித்துள்ளார் மணிமாறன். இதில், பலத்த காயமடைந்த அவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் இந்த அட்டகாசம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.