வழக்கறிஞர் இல்லத்தில் ஆளுங்கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கக் கூடிய சிலர் பெட்ரோல் குண்டு வீசியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டத்தை தொடர்ந்து தற்போது நடைபெற்றுள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மேலும் படிக்க: ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக் கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. CM ஸ்டாலின் மீது EPS பாய்ச்சல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து உணவுப்பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மாதம் மூன்றரை லட்சம் கிலோ அளவிலான விலையில்லா ரேசன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தொடர் புகார் எழுந்துள்ளது. ரேசன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரிச்செல்வம் அவர்களின் இல்லத்தில் ஆளுங்கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கக் கூடிய சிலர் பெட்ரோல் குண்டு வீசியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஏழை, எளிய பொதுமக்களுக்காக நியாய விலைக்கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் விலையில்லா ரேசன் அரிசி கடத்தலை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறியதன் விளைவாக, தற்போது பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் மோசமான சூழல் நிலவி வருவது வேதனையளிக்கிறது. மணல் கொள்ளையை தடுக்கும் அரசு ஊழியர்கள் மீதும், போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்கும் காவலர்கள் மீதும் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் இல்லத்தில் வீசப்பட்டிருக்கும் பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, கண்காணிப்பை தீவிரப்படுத்தி ரேசன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதோடு, பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கும் சம்பவத்தில் ஆளுங்கட்சியுடன் தொடர்புடையவர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்களையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.