ஒய் பிளட் ; சேம் பிளட்: ஆபாச வார்த்தைகளால் காதை மூட வைத்த வக்கீல்: போலீசுக்கே இந்த நிலையா..!!

திருப்பத்தூர் ஜோலார்பேட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லைநகரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் சாய்பாபா நகரை சேர்ந்த பைரோஸ்கான் ஆகியோரிடம் தனது காரை ஒரு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார்.

அடமானம் வைக்கப்பட்ட அந்த காரை கமலக்கண்ணனும் பைரோஸ்கானும் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாக சொல்லப்படுகிறது. காரைத் திரும்பக் கேட்ட பெண்ணிடம் காரை திரும்பத் தர முடியாது என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ என்று கமலக்கண்ணனும் பைரோஸ்கானும் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைய அந்த பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தின் போது மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ் கான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் அவர்கள் இருவரிடமும் நீதிபதி கேட்டால் உடல்நிலை சரியில்லை என்று கூறுங்கள் என்று சொல்லி தந்ததாக சொல்லப்படுகிறது. அதை கேட்ட காவலர் குடியரசன் எதற்காக இப்படி தவறாக வழி நடத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சுரேஷ் காவலர் குடியரசனை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார் அத்தனை பேர் சுற்றி இருக்க ஒரு நல்ல பொறுப்பில் இருக்கும் ஒரு வக்கீல் ஒரு காவலரை தகாத வார்த்தைகளால் பேசியது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் “இது எங்க கோர்ட் நாங்க பார்த்துப்போம்” என்று கூறினார் வழக்கறிஞர் சுரேஷ். கோர்ட் வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sudha

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

6 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

7 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

7 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

8 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

8 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

8 hours ago

This website uses cookies.