தர்மபுரி மாவட்டம் தேவரசம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது, இந்த பள்ளியில் தினந்தோறும் காலை உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை பள்ளிக்கு வந்த குழந்தைகள் காலை உணவை சாப்பிட்டனர்.
பல்லி கிடந்த சத்துணவை மாணவர்கள் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை உணவு சமைத்து வழங்கப்பட்ட பிறகு, அந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
அதற்கும் காலை உணவை பள்ளியில் சாப்பிடும் 19 மாணவ, மாணவிகள் சாப்பிட்டு விட்டதால், அரசு மருத்துவ குழுவினர் நேரில் வந்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்
இந்த தகவல், பெற்றோருக்குத் தெரிந்து அவர்கள் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.குழந்தைகளுக்கு சமைக்கும் பொழுது அஜாக்கிரதையாக இருந்த ஊழியர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
பெற்றோர்கள் மாணவர்களை காலையில் பள்ளியிலேயே உணவருந்தும்படி அறிவுறுத்து வரும் நிலையில் இவ்வாறு மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாமல் உணவு சமைத்து கொடுப்பதால் பெற்றோர்கள் தற்போது அச்சமடைந்துள்ளனர். பல்லி விழுந்த சாப்பாட்டினை குழந்தைகளுக்கு கொடுத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
This website uses cookies.