தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் வேல்பூர் மண்டலம் பாடகல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காடேபள்ளி ரமேஷ் (55) என்பவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
ரமேஷ்க்கு போச்சம்பள்ளி கிராமத்தின் புறநகரில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அந்த பகுதியில் பண்டாரை வாகு ஏரி கால்வாய் அருகே மோட்டாரை அமைக்க தனது காரில் சென்றார்.
ஏரிக்கால்வாய் அருகே காரை நிறுத்திவிட்டு தன் வேலையை முடிந்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்ல காரை ரிவர்ஸ் கீயர் போட்டு பின்னால் இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் சிக்கி ஏரிக் கால்வாயில் விழுந்து காருடன் நீரில் ரமேஷ் நீரில் மூழ்கினார்.
அங்கிருந்தவர்கள் அவசர போலீஸ் எண் 100க்கு போன் செய்ததையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்கள் உதவியுடன் காரை வெளியே எடுத்தபோது ரமேஷ் இறந்து கிடந்தார்.
ரமேஷ் குடும்பத்தினர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.