சென்னையை தொடர்ந்து மதுரையிலும் நள்ளிரவு பைக் ரேஸ் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
சென்னையைத் தொடர்ந்து மதுரை மாநகர் பாண்டி கோவில் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் சாலையை மறித்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி வாலிபர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பாண்டி கோவிலில் இருந்து கோமதிபுரம் செல்லக்கூடிய சாலையில் பைக்குகளில் அதிவேகமாக சென்று வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். பொதுவாக, சென்னையில் தான் விதிகளை மீறி இதுபோன்ற பைக் ரேஸ்கள் நடத்தப்படுவது வாடிக்கையாகும். இந்த நிலையில், மதுரையிலும் நள்ளிரவு பைக் ரேஸ் கலாச்சாரம் தலைதூக்குவது வேதனை அளிப்பதாக உள்ளது.
பைக் ரேஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்ற வாலிபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.