கோவை: கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒரே சுற்றில் 12 காளைகளை அடக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டிகளை நடைபெற்று வருகின்றன. தற்போது 5 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. மொத்தமாக 500 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
நான்காம் சுற்றில் மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற வீரர் கலந்து கொண்டு விளையாடினார். இவர் ஒரே சுற்றில் 12 காளைகளை அடக்கி 12 தங்கக் காசுகள், அண்டா, எல்.இ.டி., டி.வி, கைக்கடிகாரம் ஆகிய பரிசுகளை வென்றுள்ளார்.
மேலும், சுற்றின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட பிரபாகரனுக்கு சிறப்பு பரிசாக அமைச்சர் செந்தில் பாலாஜி சைக்கிள் ஒன்றை வழங்கினார். பிரபாகரன் இந்தாண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்றவர்.
இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், “நான் தொடர்ந்து 3 முறை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்துள்ளேன். இதுவரை வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற 12க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் வென்றுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.