மதுரையில் கல்லூரி மாணவிகளிடம் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட ஒரு மாணவியின் தந்தை சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக கல்லூரி மாணவிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் கடந்த மாதம் ஒரு கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயில் முன்பு தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக, ஈரோட்டில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவியின் கழுத்தை ஒரு இளைஞர் பிளேடால் அறுத்தார். காதல் தகராறு காரணமாக இந்த செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, மதுரையில் கடந்த சில நாட்களாகவே மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு இளைஞர்கள் அடாவடியில் ஈடுபடுவதை காண முடிகிறது. மூன்று தினங்களுக்கு முன்பு நரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்குள் புகுந்து சில இளைஞர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கு சென்று அந்த இளைஞர்களை கைது செய்தனர். இந்த சூழலில், மதுரையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது அதிரச்சியடைய செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மகளிர் கல்லூரிக்குள் புகுந்து சில இளைஞர்கள் அராஜகத்தில் ஈடுபட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மதுரை நேற்று மாலை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தியில் இறுதி ஊர்வலம் ஒன்று சென்றது. அந்த ஊர்திக்கு பின்னால் மதுபோதையில் ஆட்டம், பாட்டத்துடன் சென்ற இளைஞர்கள் சிலர், கோரிபாளையத்தில் உள்ள மீனாட்சி அரசு மகளிர் கல்லூரிக்கு முன்பு இந்த அமரர் ஊர்தி வந்தபோது, அங்கிருந்த மாணவிகளை அந்த இளைஞர்கள் கிண்டல் செய்தனர்.
அப்போது, இதனை தட்டிக்கேட்ட ஒரு மாணவியின் தந்தை, “ஏன் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்கள்” என இளைஞர்களிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், வயதானவர் என்று கூட பார்க்காமல் அவரை காலால் எட்டி உதைத்தும், ஹெல்மெட்டுகளை கொண்டும் அடித்தனர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதை பார்த்த மாணவிகள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து, பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.