பெட்ரோல் பங்கில் போலீசிடம் தகராறு…சரமாரி தாக்குதல் நடத்திய நபர் கைது: தலைமறைவான 2 பேருக்கு வலைவீச்சு..!!

புதுச்சேரி பெட்ரோல் பங்கில் தமிழக போலீசாரை தாக்கிய நபர்களை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஒருவரை போலீசார் கைது செய்து மற்ற இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி கீழ்புத்துப்பட்டு பகுதியில் ரோந்து பணி சென்று விட்டு புதுச்சேரி மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.

அப்போது அங்கு வேறு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தங்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியதற்கு காவலர் சதீஷ்குமாரே பணம் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ்குமார் உங்கள் மோட்டார் பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப நான் ஏன் பணம் தரவேண்டும் என கூறி பணம் தர மறுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காவலர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றது. இதுகுறித்து சதீஷ்குமார் காலாப்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் காவலர் சதீஷ்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது மரக்காணம் கூனிமேடு எம்ஜிஆர் நகரை சேர்ந்த மூர்த்தி(48), அவரது நண்பர்கள் ராஜதுரை, குருநாத் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூர்த்தியை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காலபட்டில் உள்ள ஒரு பாரில் மது அருந்தி விட்டு பெட்ரோல் நிரப்ப வந்த போது காவலர் உடையில் இருந்த சதீஷ் சென்னையில் உள்ள தங்களது போலிஸ் நண்பர் போலவே இருந்ததால் குடி போதையில் அவரிடம் பணம் கேட்டதாகவும், இதில் சதிஷ் சற்று கோவமாக பேசியதில் தாங்கள் ஆத்திரம் அடைந்து அவரை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூர்த்தியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், மேலும் மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

5 minutes ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

7 minutes ago

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

1 hour ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

2 hours ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

13 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

14 hours ago

This website uses cookies.