கிருஷ்ணகிரி ; ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை ஆணவ கொலை செய்த தந்தை, தடுக்க வந்த தாயையும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 47). இவரது மகன் சுபாஷ் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பணிபுரியும் இடத்தில் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணி, மகன் மற்றும் மருமகளை வீட்டிற்கு அழைத்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த தாய் கண்ணம்மாள் அவரையும் வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் மகன் சுபாஷ் (22). சுபாஷின் பாட்டி கண்ணம்மாள் (65) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருமகள் அனுசுயா (25) உயிருக்கு போராடும் நிலையில் படுகாயங்களுடன் இருந்தவரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிபதி அமர்ஆனந்த், உயிருக்கு போராடும் நிலையில் உள்ள அனுசுயாவிடம் மரண வாக்குமூலத்தை பெற்றார். சம்பவ இடத்தில் ஊத்தங்கரை டிஎஸ்பி அமல அட்வின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.