கிருஷ்ணகிரி ; ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை ஆணவ கொலை செய்த தந்தை, தடுக்க வந்த தாயையும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 47). இவரது மகன் சுபாஷ் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பணிபுரியும் இடத்தில் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணி, மகன் மற்றும் மருமகளை வீட்டிற்கு அழைத்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த தாய் கண்ணம்மாள் அவரையும் வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் மகன் சுபாஷ் (22). சுபாஷின் பாட்டி கண்ணம்மாள் (65) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருமகள் அனுசுயா (25) உயிருக்கு போராடும் நிலையில் படுகாயங்களுடன் இருந்தவரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிபதி அமர்ஆனந்த், உயிருக்கு போராடும் நிலையில் உள்ள அனுசுயாவிடம் மரண வாக்குமூலத்தை பெற்றார். சம்பவ இடத்தில் ஊத்தங்கரை டிஎஸ்பி அமல அட்வின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.