திமுகவுக்கு ரூ.656 கோடியில் ரூ.509 கோடியை கொடுத்த மார்ட்டின்… வெளியான முழு பின்னணி!!!

திமுகவுக்கு ரூ.656 கோடியில் ரூ.509 கோடியை கொடுத்த மார்ட்டின்… வெளியான முழு பின்னணி!!!

தேர்தல் பத்திரம் செல்லாது. இனி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கக்கூடாது என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் 2019 முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரை தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை, நன்கொடை வழங்கியவர்களின் விபரங்களை வெளியிட எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் எஸ்பிஐ வழங்கும் தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 14ம் தேதி எஸ்பிஐ அளித்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் நன்கொடை பெற்ற கட்சிகளின் விபரங்கள் தனித்தனியே இருந்தன.
தேர்தல் பத்திரத்தின் எண் இல்லாத நிலையில் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கினர் என்பது தெரியாமல் போனது. எஸ்பிஐயின் இந்த செயலை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டித்ததோடு, தவறு நடந்தது தொடர்பாக நாளைக்குள் விளக்கம் அளிக்க எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கிடையே தான் 2018 முதல் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையில் உள்ளது. ஆனால் 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரையிலான தேர்தல் பத்திர நன்கொடை விபரங்கள் மட்டுமே கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு முன்பு 2018 முதல் 2019 ஏப்ரல் 12ம் தேதி வரையிலான தேர்தல் பத்திரங்களின் விபரம் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தான் வெளியிடப்படாமல் இருந்த 2019 ஏப்ரல் 12ம் தேதிக்கு முந்தைய தேர்தல் பத்திரங்களின் விபரம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

அதில் திமுகவுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி திமுக மொத்தம் ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.509 கோடியை ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் வழங்கி உள்ளது. இது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் நிர்வாக இயக்குனராக உள்ள ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது. ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளார்.

இந்த லாட்டரி மார்ட்டின் கடந்த பணமோசடி வழக்கில் சிக்கினார். மேலும் மார்டின் மற்றும் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

10 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

10 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

11 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

11 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

12 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

12 hours ago

This website uses cookies.