மேயர் பிரியா, அமைச்சர் கயல்விழி ஏன் பேசவில்லை.. ராஜினாமா செய்யுங்க.. கொந்தளிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்! .

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டலில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி பிஎஸ்பி மற்றும் நீலம் அமைப்பினர் சார்பில் நடைபெற்றது.

இதில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ், வில்லன் நடிகர் தீனா, தலித் கூட்டமைப்பினர், சமூக செயல்பாட்டாளர்கள், பல கட்சிகளின் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரமடா ஹோட்டல் அருகே தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது. தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டமும் நடந்தது.
இந்த கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். தொடர்ந்து மேடையில் பேசிய பா.ரஞ்சித்,”பிரியா ராஜன் திமுகவில் இருப்பதால் அவர் மேயர் இல்லை.. ரிசர்வேஷன் இருந்ததால் தான் பிரியா ராஜன் மேயராகவும், கயல்விழி செல்வராஜ் அமைச்சராகவும் வாய்ப்பு கிடைத்தது.

மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இருவரும் ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்கவில்லை?

நீங்கள் திமுகவில் இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா? நாங்கள் அரசியலற்று இருக்கலாம்.

ஆனால் அரசியல்வுடைவர்களாக மாறும்பொழுது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை மாறும். மேயர் பிரியா ராஜன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் எப்படி உயர் பதவிகளுக்கு வந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எப்பொழுது இதற்காக குரல் கொடுப்பீர்கள்? குரல் கொடுக்கவில்லை என்றால் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள். நாங்கள் ஒன்றும் அடிமை இல்லை.

எங்களுக்கு பயம் ஏதும் கிடையாது. பயமில்லாமல் நாடாளுவோம். பயம் இல்லாமல் ஒன்றிணைவோம்.

எங்கள் பின்னாள் வேறு ஒருவர் இருக்கிறார் என்று பிம்பத்தை உருவாக்காதீர்கள். பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நான் திமுகவிற்கு எதிராக பேசவில்லை. அனைத்துக் கட்சிக்கு எதிராக பேசுகிறேன்.

அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள். அரசியல் கட்சிகள் எங்களுக்கு என்ன செய்தார்கள். எங்கள் தலைவர் இறந்த உடனே அவரை ஊருக்கு வெளியில் அடக்கம் செய்வது தான் திட்டமா?

ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னைக்குள் மணிமண்டபம் கட்ட வேண்டும். சமூக நீதியை பின்பற்றும் திமுகவிற்கு ஒரு வேண்டுகோள்.
ஆம்ஸ்ட்ராங்கிற்கு சென்னையில் மணிமண்டபம் கட்ட திமுக அரசு அனுமதிக்க வேண்டும். திமுக, அதிமுக அனைத்து கட்சிகளுமே எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அளிக்கவில்லை.

பாஜகவிற்கு நேர் எதிரானவர்கள் நாங்கள். உங்கள் பின்னாடி சும்மா அவர் இருக்கிறார், இவர் இருக்கிறார் என்ற பிம்பத்தை உருவாக்காதீர்கள்.
எங்களுக்கு பிரதிநிதித்துவம் இங்கு இல்லை. என்ன நீங்க சமூகநீதி மாடல்?

பல ஆணவக்கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விசிக தலைவர் திருமாவளனுக்கு எதிராக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். திருமாவளவனை ஒருபோதும் விட்டு விடமாட்டோம்; அவருடன் தான் இருப்போம் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

8 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

8 hours ago

This website uses cookies.