சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில், மேயர் பதவிகளைப் பெற கூட்டணி கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியால் முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக அப்படியே முழுமையாக கைப்பற்றி விட்டது. அதேபோல 138 நகராட்சிகளில் 134ம், 489 பேரூராட்சிகளில் 435ம் திமுக கூட்டணியின் வசமே சென்றுள்ளது.
கூட்டணியில் திமுக ஒதுக்கிய இடங்களில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்று விட்டன. இதனால், மேயர், துணை மேயர் பதவிகளை கேட்போம் என்று தேர்தல் முடிந்த உடனே கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்து விட்டனர். மேலும், இது தொடர்பாக திமுக தலைமையை சந்தித்தும் முறையிட்டுள்ளனர்.
அதேவேளையில், மேயர், துணை மேயர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர்களின் பரிந்துரை பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலினிடம் சமர்பித்த மாவட்ட நிர்வாகிகள், 21 மேயர் பதவிகளையும் திமுக வசமே வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி, “மத்தியில் 60 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறோம். கடந்த 7 ஆண்டுகள் ஆளாமல் இருப்பதும் ஒரு அனுபவம்தான். ஒருநாள் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக வரும். மேயர் பதவிகளை திமுகவிடம் கேட்டிருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டார்.
இதேபோல, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கணிசமான வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், 9 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவி எங்களுக்கு ஒதுக்குமாறு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் கேட்டுள்ளோம்,” எனக் கூறியுள்ளார்.
திமுக தயவு இல்லாமல் கூட்டணி கட்சிகளால் இவ்வளவு வெற்றி பெற்றிருக்க முடியாது எனக் கூறப்பட்டு வந்தாலும், திமுக தனி மெஜாரிட்டியுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, பெரும்பாலான இடங்களை திமுக தன்வசமே வைத்துக் கொள்ளுமே தவிர, விசிக, காங்கிரஸ் கேட்பதைப் போல, கேட்கும் இடங்களை தந்துவிடாது. பெயரளவுக்கு ஒரு சில இடங்களில் முக்கியத்துவம் வழங்கப்படலாம். தமிழகத்தில் திமுகவுக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் நம்புவதால், திமுகவின் முடிவுக்கு கூட்டணி கட்சிகள் கட்டுப்பட்டே ஆக வேண்டிய நிலை மட்டுமே உள்ளது, என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.