தேர்தலில் சீட் கிடைக்காத நிலையில் தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேச மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட ஈரோடு தொகுதி இந்த முறை வழங்கப்படவில்லை. திருச்சி தொகுதியிலும் வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த சூழலில், ஈரோடு தொகுதியில் கடந்த முறை மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்பி கணேச மூர்த்தி மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் தற்கொலை முடிவெடுத்து மாத்திரைகளை அதிகளவு சாப்பிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.
கடந்த 3 தினங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிகிச்சையின் போது ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
This website uses cookies.