மிரள வைத்த மிக்ஜாம்… தத்தளித்த சென்னை : அண்ணாமலைக்கு பதறிப்போய் போன் போட்ட ஜேபி நட்டா!!

மிரள வைத்த மிக்ஜாம்… தத்தளித்த சென்னை : அண்ணாமலைக்கு பதறிப்போய் போன் போட்ட ஜேபி நட்டா!!

வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக உருமாறி உள்ளது. இந்த புயல் நாளை தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது.

தற்போது இந்த புயல் படிப்படியாக நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவி வருகிறது. இந்த புயல் ஆந்திரா நோக்கி மெதுவாக நகர்ந்து செல்கிறது.

இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். அதோடு வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு படையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டு வருகின்றனர். மக்களுக்காக சென்னையில் 163 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் புயல் நகர்வு மற்றுமு் பாதிப்பு பகுதிகளை உன்னிப்பாக கவனித்து மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தான் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் புயல் பாதிப்பு விஷயங்களை அவரிடம் கேட்டறிந்தார். அதோடு பாஜக சார்பில் உதவிகள் செய்வதாக அவர் உறுதியளித்ததோடு, தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் புயல் பாதிப்புள்ள பகுதிகளில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளார்.

இதனை அண்ணாமலை உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா என்னை தொடர்பு பேசி பேசினார். சென்னை உள்பட தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார். அவருக்கு நன்றி. அதோடு அண்டை மாநில பாஜக சார்பில் நிவாரண உதவிகள் வழங்குவதாக உறுதியளித்தார். அதோடு மாநகராட்சி, மாநில அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்களுடன் சேர்ந்து பாஜகவினர் உதவவும் அறிவுரை வழங்கினார்” என குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…

32 minutes ago

GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey

மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…

50 minutes ago

GBU படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி.. வீடியோ வைரல்!

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…

1 hour ago

காதலனை திருமணம் செய்த மகள் கௌரவக் கொலை.. 6 மாத கருவை கலைத்து, சிறையில் தள்ளிய பெற்றோர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…

2 hours ago

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

17 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

18 hours ago

This website uses cookies.