புதுக்கோட்டை அருகே ஓம் சக்தி பக்தர்கள் மீது சிமெண்ட் ஏற்றி வந்த ஈச்சர் வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னையை சேர்ந்த ஓம் சக்தி பக்தர்கள் மாலை அணிவித்து ஒவ்வொரு ஆலயமாக சென்று வந்துள்ளனர். தற்பொழுது ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர். அப்பொழுது, புதுக்கோட்டை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற இடத்தில் இன்று அதிகாலை தங்களது வந்த வாகனங்களை இரண்டு கார் ஒரு சைலோவில் தேநீர் அருந்த ஓரமாக நிறுத்தி உள்ளனர்.
அப்பொழுது அதிவேகமாக வந்த சிமெண்ட் மூட்டை ஏற்றிய ஈச்சர் வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் மீது மோதியது. இதனால் அதே இடத்தில் 4 பேர் இறந்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமண சமுத்திரம் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, காயமடைந்தவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 108 வாகனத்தில் கொண்டு செல்லும் பொழுது, மேலும் ஒருவர் பலியானார்.
பின்னர் காயமடைந்த அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாலை நடந்த சாலை விபத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.