ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் தி.நரசாபுரம் மண்டலம் பொரம்பலம் கிராமத்தில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டம் நிடதவோலு மண்டலம் தாடிமல்லுக்கு முந்திரி லோடுடன் மினி லாரி புறப்பட்டது.
இந்த லாரி தேவாரப்பள்ளி மண்டலம் அரிபட்டிப்பாலு – சின்னகுடம் சாலையில் வந்த போது சாலையில் பள்ளம் இருந்ததால் அதில் செல்லாமல் தவீர்க்க முயன்று இடது பக்கம் லாரியை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆற்று கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் வாகனத்தில் 9 பேர் இருந்த நிலையில் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். வாகனம் கவிழ்ந்ததில் முந்திரி மூட்டைகளுக்கு அடியில் சிக்கி 7 கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
லாரி கேபினில் இருந்த காயமடைந்த கந்தா மதுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் டிஎஸ்பி தேவகுமார், எஸ்எஸ்ஐ ஸ்ரீஹரிராவ், சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: அதிகாரம் மட்டும் கிடைத்தால்.. அசந்தே போவீங்க : கோவையில் சவால் விட்ட அன்புமணி!!
இந்த விபத்தில் தேவபத்துல பூரையா (40), தம்மிரெட்டி சத்தியநாராயணா (45), பி.சினமுசலயா (35), கட்டவ கிருஷ்ணா (40), கட்டவா சத்திபண்டு (40), தாடிமல்லா, சமிஷ்ரகுடம் மண்டலத்தைச் சேர்ந்த தாடி கிருஷ்ணா (45), நிடதவோலு மண்டலம் கடகோடேஸ்வராவைச் சேர்ந்த பொக்கா பிரசாத் ஆகியோர் உயிரிழந்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.