முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், திருவண்ணாமலையில் உள்ள வீடு, கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா..? என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்கள் என 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, கோவையில் ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அங்கு காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் எனப்படும் நிலையில், இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் சேர்மன் இல்லமான சக்திவேல் இல்லத்திலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. மூன்று வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் நான்கு குழுக்களாக பிரிந்து துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் சினிமா படத்தை மிஞ்சும் அளவுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராயர் சாலை ரெசிடென்சி டவர்ஸ், ஜிஎன் செட்டி சாலை ரெசிடென்சி இன் ஆகிய 2 நட்சத்திர விடுதியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளே சுற்றுலா பயணிகள் போல் அறையெடுத்து தங்கி, நோட்டம் விட்டு, இன்று காலையில் அதிரடி சோதனையில் இறங்கினர்.
திநகர் ரெசிடென்சி ஹோட்டலில் அமைச்சர் எவ வேலுவுக்கு நெருக்கமானவர்கள் தங்கியுள்ள அறைகளை குறிவைத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. CASA GRANDE அடுக்குமாடி குடியிருப்பு, ஹவுசிங்சொஸைட்டி கட்டுமான நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.