விருதுநகரில் அமைச்சரின் நிகழ்ச்சியில் பெண்களை தரையில் அமர வைத்த அதிகாரிகள், பின்னர் அமைச்சரின் வருகைக்காக மீண்டும் அவசர அவசரமாக எழுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.இராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரியும் அமைச்சர்களை வரவேற்பதற்காக டிஜிட்டல் பேனர்கள் மற்றும் கொடிகளை வழி நெடுகிலும் வைத்திருந்தனர்.
ஆனால் அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்வதற்காக மாவட்ட ஆட்சியரின் அலுவலக நுழைவு வாயிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பெயர் பலகையை மறைத்து டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் , என்ன செய்வது ஆளுங்கட்சி என்றால் மாவட்ட ஆட்சியர் பெயர் பலகையை கூட மறைத்து வைக்கலாம் போல என மன வேதனையுடன் பேசி சென்றனர்.
அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு அமைச்சரின் கண்ணில் படும்படியாக இருக்க வேண்டுமாம். அதனால், டிஜிட்டல் பேனர் வைத்தார்களாம் என அவர்கள் கட்சியினரே சிலர் பேசிக்கொண்டது வியப்பிற்குறியது.
அது மட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கு பெற வந்த பெண்கள் அரங்கிற்கு வெளியில் தரையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தனர்.
பின்பு அமைச்சர் நிகழ்ச்சி முடிந்து அரங்கை விட்டுவெளியே வரும் போது, தரையில் அமர்ந்திருந்த பெண்களை, அமைச்சர் வருகிறார் அமர வேண்டாம் ” எழுந்திருங்கள், எழுந்திருங்கள் ” என அவசர அவசரமாக எழுந்திருக்க செய்த துறை அலுவலர்களின் செயல் மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது என அப்பெண்கள் புலம்பி சென்றனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.