திண்டுக்கல்லில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிலத்தை யாரிடமும் கேட்காமல் பிடுங்கி கொள்ளலாம் என்று பகிரங்கமாக கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நகராட்சி திட்டப்பணிகள் ஆலோசனைக் கூட்டம் நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டனர். இதில், பேரூராட்சி தலைவர்கள் நகராட்சி தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாநகராட்சிக்கு சொந்தமாக 15 ஏக்கர் இடம் உள்ளது. அதற்கு கூடுதலாக இடம் வேண்டும் என்றால், அருகில் இருப்பவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டு, நஷ்டஈடு வழங்காமல் பேருந்து நிலையத்தை ஆரம்பித்து விடலாம் என்று கூறியது அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அரசு நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சரே நிலத்தை புடுங்கிக் கொள்ளலாம் என்று அதிகார தோரணையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்ட வளர்ச்சி திட்டப் பணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் செல்பி எடுத்துக் கொண்டதும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
This website uses cookies.