உதயநிதி முன்பே திமுக தொண்டரை தலையில் தாக்கிய அமைச்சர் கேஎன் நேரு… அடுத்தடுத்த சர்ச்சைகளால் திணறும் திமுக அரசு..!!

திமுக நிர்வாகி மீது அமைச்சர் நாசர் கல்லை வீசி தாக்கிய சம்பவம் குறித்த சர்ச்சை அடங்குவதற்குள், அமைச்சர் கேஎன் நேரு திமுக தொண்டர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். அதாவது, பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணத்தை ஓசி பயணம் எனக்கூறி அமைச்சர் பொன்முடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தாக்கியதும் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

அவரைத் தொடர்ந்து, திமுக எம்பி ஆ.ராசா மனுஸ்ருதி தொடர்பான சர்ச்சை பேச்சும் எதிர்கட்சிகளுக்கு நல்ல தீணியாக அமைந்தது. இதேபோல, அமைச்சர் கேஎன் நேரு,மற்றொரு அமைச்சரான கே.என்.நேருவோ திருச்சியில் நடைபெற்ற விழாவில் நீர் நிரம்பிய குடங்களை வேகமாக எடுத்துக் கொடுக்காததால் திமுக கவுன்சிலரின் பின்னந்தலையில் கையால் தட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,என் முகத்தை பார்த்தாலே தெரியும், கட்சினர் சிலரது செயலால் தூக்கமின்றி தவிக்கிறேன். என்னை தூங்க விடாமல் செய்கிறார்கள். துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது என்று முதல்வர் ஸ்டாலின் புலம்பினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பேச்சுக்குப் பிறகும் அமைச்சர்கள் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டபாடில்லை. அண்மையில், அமைச்சர் நாசர், திமுக நிர்வாகி ஒருவரை கல்லை வீசி தாக்கிய சம்பவம் மக்களிடம் கண்டனங்களை எழச் செய்தது.

இது தொடர்பான சர்ச்சை அடங்குவதற்குள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் கேஎன் நேரு திமுக தொண்டர் ஒருவரை தாக்கிய சம்பவம் திமுகவை மென்மேலும் நெருக்கடிக்கு ஆழ்த்தியுள்ளது.

சேலத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உதயநிதிக்கு நேற்று இரவு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் பஸ் நிலைய பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் கே.என்நேரு, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் மேளதாளத்துடன் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது ஒரே நேரத்தில் ஏராளமான தொண்டர்கள் அந்த இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சமயம் தொண்டர் ஒருவர் உதயநிதிக்கு சால்வை அணிவிக்க முயன்றார். இதனை அருகில் இருந்து கவனித்த அமைச்சர் கேஎன் நேரு, அவரை தலையில் அடித்து வெளியேற்றினார்.

இதே போல அங்கிருந்த தொண்டர்களை வேகமாக செல்லும் படி அதட்டியும் அடி கொடுத்தும் அனுப்பி வைத்தார். இதனை அங்கிருந்த பார்த்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் சிகமணி மீடியாக்கள் வீடியோ எடுக்கிறாங்கனு நினைவுபடுத்தினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.

அடுத்தடுத்த அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார் என்பதே நிதர்சனம்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

செந்தில் பாலாஜியால் மீண்டும் திமுகவுக்கு சிக்கல்.. எம்பியும் சேர்ந்ததால் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களின் இடங்கள் மற்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி…

2 minutes ago

ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!

சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…

52 minutes ago

அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…

2 hours ago

மும்மொழிக்கு ஆதரவு.. பயத்தில் நிலை தடுமாறும் முதலமைச்சர் : அண்ணாமலை அட்டாக்!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…

2 hours ago

என்னைய மறந்துட்டாங்க…புலம்பும் விஜய் பட வில்லன்..!

இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…

3 hours ago

’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…

3 hours ago

This website uses cookies.