இந்தியாவில் இன்னும் விற்பனைக்கே வராத சொகுசு காரை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி கார்களில் ஒன்று டொயோட்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடலான லேங்ணட் க்ரூஸர். இந்தக் கார், பிரதமர் மோடி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் விருப்பமான காராகும்.
கரடு முரடான சாலைகள் மட்டுமல்லாது, முள் நிறைந்த பகுதிகள், மணல் நிறைந்த பாலை வனங்கள் என எந்த பாதையிலும் தடையின்றி பயணிக்கக் கூடிய திறனை கொண்டதுதான் இந்தக் காரின் சிறப்பம்சாகும். பல்வேறு அம்சங்களும் அதிக சொகுசு மற்றும் அதி நவீன் தொழில் நுட்ப வசதிகளை கொண்ட இந்த காரின் மைலேஜ் ஒரு லிட்டர் டீசலுக்கு வெறும் 4 கிலோ மீட்டர் மட்டுமே.
தற்போது லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 மாடலை சஹாரா வெர்ஷனில் விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது டொயோட்டா நிறுவனம். செமி கண்டக்டர் தயாரிப்பில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 மாடலை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
இந்தக் காரின் விலை ரூ.2 ஆகும். அதுவும் பணத்தை கட்டினாலும் உடனேவும் டெலிவரி கிடைக்காது. லேண்ட் க்ரூஸர் காரை புக் செய்தால், டெலிவரி செய்ய 6 மாத கால அவகாசமாகும். ஆனால், தற்போது, காத்திருப்பு காலத்தை உயர்த்தி 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 காரை இந்தியாவில் விற்பனை கொண்டு வர இருப்பதாக இன்னும் அறிவிப்பை கூட வெளியிடாமல் இருக்கிறது.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தக் காரைத்தான் அமைச்சர் கே.என். நேரு வாங்கி கெத்தா வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக, வெளிநாடுகளிலேயே முழுவதும் கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி அதிகமாகும். அதாவது, ரூ.2 கோடி காரின் விலை என்றால், அதே விலை வரியாக கட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல், சாலை வரி, காப்பீடு என அதற்கு தனிசெலவு வேறு உண்டு.
மற்றொன்று, காரின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி குறைவு என்பதால், பெரும்பாலானோர், உதிரிபாகங்களை இறக்குமதி செய்துவிட்டு, இந்தியாவில் கட்டமைப்பதைத் தான் செய்வார்கள்.
ஆனால், எல்லோருக்கும் முன்பாக நாம் அந்த காரை பயன்படுத்தி விட வேண்டும் என்று விரும்பும் பல பிரபலங்கள், பல கோடிகளை செலவு செய்வது வழக்கம். இதுபோன்று தான் அமைச்சர் நேருவும், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 மாடல் காரின் மீது அதிக ஆர்வம் கொண்டு, பல கோடிகளை செலவு செய்து வெளிநாட்டில் இருந்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.