சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மேயர் பிரியாவை அமைச்சர் கே.என். நேரு அதட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
சென்னை தினம் தலைநகரில் 2 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவர்களுக்கு நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பரிசுகளை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் கே.என். நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் கொண்டு வந்திருந்த பேப்பரை வாசிக்கட்டுமா..? என்று அமைச்சரிடம் மேயர் பிரியா கேட்டார். அதற்கு அமைச்சர் கே.என். நேரு, “சொல்லுமா…” என அதட்டி சொன்னார்.
இதைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு, சென்னையில் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கே.என். நேருவும் பதிலளித்தார்.
‘
பின்னர், செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்த பிறகு மேயர் பிரியா எழுந்து சென்றார். அப்போது, பத்திரிக்கையாளர் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்ட அமைச்சர் கே.என். நேரு, “யம்மா, நிப்பியா அப்படியே” எனக் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் சென்னை மேயரை அமைச்சர் அதட்டி பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர், எதிர்ப்பும், விமர்சித்தும் வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.