டிரெண்டிங்

எதிர்கட்சிகள் இதைக் கூறுவார்களா? கே.என்.நேரு ப்ளான் என்னவாகும்?

வடகிழக்கு பருவமழையைச் சமாளிப்பதற்குத் தேவையான முன்னேற்பாடு பணிகள் சரியாக நடைபெற்று வருகிறது எனக் கூறிய அமைச்சர் கே.என்.நேரு அனைத்தையும் நாங்கள் சரியாக செய்கிறோம் எனக் கூறுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தபட்டதை தொடர்ந்து, இன்று (அக்.9) மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி ஏற்கும் விழா மற்றும் முதல் கூட்ட விழா ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார். மேலும், இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் மாநகராட்சி மேயருக்கு 51 பவுன் தங்கச் சங்கிலியை ஆட்சியர் அருணா அணிவித்தார். மேலும், செங்கோலை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் திலகவதி செந்திலிடம் வழங்கினார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “வடகிழக்கு பருவ மழையைச் சமாளிப்பதற்கு முதலமைச்சர் அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதேபோன்று, துணை முதலமைச்சரும் கூட்டங்களை நடத்தி, எந்தெந்த பணிகள் தாமதமாக நடைபெறுகிறது, எதனால் தாமதம் ஏற்படுகிறது, பணிகளை விரைந்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது, ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது. எந்த காலநிலையையும் எதிர்கொள்வதற்கு மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் தயாராக உள்ளன. பருவமழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு இடங்கள், அவர்களுக்குத் தேவையான உணவு ஆகியவை செய்து தருவதற்கு தயாராக உள்ளோம். இயற்கை மாற்றங்களான மரங்கள் அகற்றுவதற்கும் தயாராக உள்ளோம். பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள் நாங்கள் சரியாக செய்கிறோம் என்று கூறுவார்களா? பணிகள் தரமாக நடந்துள்ளதா என்பதை தணிக்கைத் துறை தான் ஆய்வு செய்யும். முதலமைச்சர் உத்தரவிட்டு பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சராசரியாக எவ்வளவு செய்யுமோ, அந்த அளவு மழை பெய்தால் எந்த விதமான பாதிப்பும் நமக்கு ஏற்படாது.

இதையும் படிங்க: தலைநகரத்தில் தலையை காட்டாத தலைவர் : இனியாவது சாட்டையை சுழற்றுவாரா இபிஎஸ்!

இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் போது, அதற்கான நேரம் குறுகியத் தன்மையுடன் இருக்கும்போது பணிகள் செய்வதற்கு சற்று தாமதமாகும். அதற்காகத்தான் நீரை அகற்றுவதற்கு பம்பு, மோட்டார்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் கட்சி என்ன சொல்கிறதோ, அந்தப் பணிகளை நாங்கள் செய்வோம். 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வரி உயர்வு என்பது இல்லை. ஒரே தடவையாக வரி உயர்வு செய்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகத்தான், படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக வரி உயர்வு செய்து வருகிறோம்.

வரி உயர்வு என்பது அனைவரையும் பாதிக்காது, மேல் தட்டு மக்களுக்கு தான் வரி உயர்வு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. கீழ்மட்ட மக்களுக்கு வரி உயர்த்தப்படவில்லை. ஊராட்சிகளை இணைக்கக் கூடாது என்று பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு, மாவட்ட ஆட்சியர் மூலமாக கருத்துருவை வாங்கித்தான் 11 ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நகராட்சி நிர்வாகத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தான் தேர்வுகள் நடத்தப்பட்டு, 7 ஆயிரத்து 200 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் சில நகராட்சிகள் மாநகராட்சிகளுடனும், ஊராட்சிகள் நகராட்சிகளுடனும் இணைந்து மக்கள்தொகை அடிப்படையில் அதன் பரப்பளவை அதிகப்படுத்திட மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

11 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

11 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

12 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

14 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

15 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

16 hours ago

This website uses cookies.